இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு ‘ஆர்ய பட்டா’. இந்த செயற்கைக்கோளுக்கு புகழ்பெற்ற வானியலாளர் மற்றும் கணித மேதையின் பெயர் சூட்டினர். இது 1975 ஏப்ரல் 19 அன்று சோவியத் ஒன்றிய அரசின் விண்வெளி ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப் பட்டது. முதல் செயற்கைக்கோளின் வெற்றியில் இருந்து பல மைல் கற்களை எட்டியிருக்கிறது இந்தியா.
தாங்கள் தான் வல்லரசு என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பற்றிக்கேலி பேசிக் கொண்டிருந்த நிலையில், நட்பு ரீதியாகவும் அரசியல் ரீதி யாகவும் இந்தியாவுக்கு துணை நின்று தோள் கொடுத்து உயரத்தில் ஏற்றி விட்டது சோவியத் ஒன்றிய அரசாங்கம்தான்.
இந்திய அறிவியலாளர்கள் தங்கள் தொழில்நுட்பத்தை கொண்டு செயற்கைக்கோளை நிறுவுவதற்கு தொழில் நுணுக்கங்களுடன் அனைத்து வகையிலும் ரஷ்ய விஞ்ஞானிகள் உதவி செய்தனர். அன்றைக்கு அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் கர்நாடகாவில் பிறந்த அறி வியலாளர் உடுப்பி ராமச்சந்திர ராவ். அவரது வழிகாட்டுத லின் கீழ், ‘ஆர்யபட்டா’ தொடங்கி பாஸ்கரா, ஆப்பிள், ரோகிணி, இன்சாட், ஐஆர்எஸ் உள்ளிட்ட பல்நோக்கு உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டது. இதனால் அவர் இந்தியாவின் ‘சாட்டிலைட் மேன்’என்று அழைக்கப்பட்டார்.
புதிய திசையில் பயணித்து கொண்டு வரும் இஸ்ரோ வின் வெற்றிக்கு டாக்டர் கே. ராதாகிருஷ்ணன், ஏபிஜே அப்துல் கலாம் என சிறந்த ஆளுமைகள் பெரும் பங்காற்றி னர். இவர்களில் இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக் கோள் ஏவு வாகனத்தின் (Satellite Launch Vehicle (SLV-III)) திட்ட இயக்குநராக இருந்தவர் அப்துல்கலாம்.
தொலைத் தொடர்பில் புரட்சி!
இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (இன்சாட்) என்பது தெற்காசியப் பகுதி முழுவதும் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பை எளிதாக்கும் செயற்கைக்கோள்களின் வலையமைப்பாகும். இதன் முதல் செயற்கைக்கோள் 1983 இல் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் தான் இந்தியாவின் தொலைக்காட்சி, வானொலி ஒலிபரப்பு, தொலைத்தொடர்பு மற்றும் வானிலை துறையில் புரட்சியை ஏற்படுத்தியது இஸ்ரோ. தற்போது, இந்த திட்டத் தில் ஒன்பது செயற்கை கோள்கள் செயல்படுகின்றன.
‘ஆசியாவின் பெருமை’!
துருவ சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கு நான்கு நிலைகளைக் கொண்டு திட மற்றும் திரவ உந்துவிசை அமைப்புகள் மாறி மாறி பயன்படுத்தும் துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனம் (பிஎஸ்எல்வி) Polar Satellite Launch Vehicle (PSLV) மற்றும் புவிசார் செயற்கைக்கோள் ஏவு வாகனம் (ஜிஎஸ் எல்வி) Geosynchronous Satellite Launch Vehicle (GSLV) ஆகியவற்றை உருவாக்கியது இஸ்ரோ.
இந்தியாவின் முதல் ஆளில்லா நிலவு ஆய்வு ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது என்றாலும் விண்வெளி பயணத்தில் அது இந்தியாவின் ஒரு முக்கிய அடையாளமானது. அதன் தொடர்ச்சியே தற்போதைய சந்திரயான்-3.
நவம்பர் 5, 2013 அன்று, செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் தனது முதல் விண்கலத்தை ஏவியது இஸ்ரோ.
இதற்கு முன்பு அமெரிக்கா, சோவியத் யூனியன், ஐரோப் பிய விண்வெளி நிறுவனம் மட்டுமே செவ்வாய்க் கிரகத் தில் வெற்றிகரமாக ஆராய்ந்தன. செவ்வாய் கிரகத்திற்கு சென்ற முதல் ஆசிய நாடு என்ற பெருமையுடன் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற உலகின் ‘முதல்’ நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது. வெற்றிகர மான இந்த பயணத்தை “ஆசியாவின் பெருமை” என்று சீனாவும் பாராட்டியது.
புதிய சகாப்தம்!
விண்வெளி பயணத்தில் மேலும் புதிய தொழில்நுட்பங் களுடன் இந்திய பல்கலைக்கழக மாணவர்களை கொண்டு செயற்கைக்கோள் உருவாக்கிய இஸ்ரோ நிறுவனம், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் இந்தோனேசியா நாடுகளின் 20 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில், வணிக ரீதியில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த திட்டமும் வெற்றி பெற்றது. அடுத்ததாக, ஒரே ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை வெற்றிகர மாக விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்துள்ளது. இதில் 101 செயற்கைக்கோள் வெளிநாடுகளுக்கு சொந்த மானதாகும்.
மிகக் குறைந்த மூலதனத்தில் அதிக மூளைத் திறனை கொண்டு இஸ்ரோவின் அறிவியலாளர்கள் தங்கள் பணியில் நேர்மை, பொறுப்பு, அர்ப்பணிப்புடன் தங்கள் பங்கை முழுமையாக வழங்கி புதிய திசைவழியில் பயணித்து வருவதால் உலக பொருளாதாரத்தின் ‘புதுமை மையமாக’’ மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டிஷ் வார இதழான நியூ சயின்டிஸ்ட் இந்தியாவை உலகின் வளர்ந்து வரும் ‘அறிவியல் வல்லரசு’ என்று வர்ணித்து இருக்கிறது.
இந்நிலையில்தான் தேதி திட்டமிட்டபடி ஸ்ரீஹரி கோட்டா சதீஷ் தவான் ஏவுதலத்திலிருந்து வெற்றிகரமாக சந்த்ரயான்–3 அனுப்பப்பட்டது. இந்த நிகழ்வை உலகமே பார்த்து ஆச்சரியம் அடைந்தது. விண்வெளி உலகில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
ஆனாலும் இதற்கு முந்தைய நாளில், இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தலைமையில் 15க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் ராக்கெட்டின் மாதிரியை எடுத்துச் சென்று திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்று கருவறையில் வைத்து சிறப்பு பூஜை, பிரார்த்தனை செய்தனர். ராக்கெட் ஏவும் நிகழ்வை நேரில் பார்ப்பதற்கு வருகை தந்த ஒன்றிய அமைச்சரும் சிறப்பு வழிபாடு செய்தார். அது மட்டுமில்லாமல், ஸ்ரீஹரிகோட்டா அருகாமையி லுள்ள சூலூர் பேட்டை செங்காலம்மா கோவிலுக்கு சென்ற சோம்நாத் அங்கும் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
இத்தனை பூஜைகள் நடத்தியும் திருப்தி இல்லாமல் சிறப்பு யாகமும் நடத்தியுள்ளனர். அதுவும் போதாதது என்று தரையில் இருந்துசெயற்கைக்கோள் புறப்படு வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக, சதீஷ் தவான் ஏவுதல் வாகனத்தின் மீது கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்தும் வழிபாடு செய்துள்ளனர்.
இந்தியாவின் விண்வெளி நிறுவனம் கடந்த காலங்களில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் பலவும் தோல்வி அடைந் துள்ளன. இப்போதெல்லாம், இத்தகைய மூடநம்பிக்கை களும் பிற்போக்குத்தனமும் தலையெடுத்தது கிடையாது.
ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியை இந்துத்துவமயமாக்க முயற்சித்து வருகிறது.
இந்திய அறிவியலாளர்களின் நவீன அறிவியல் தொழில்நுட்ப நடைமுறைகளில் ஆன்மீக போதனைகளை யும் இந்துத்துவ நடைமுறைகளையும் புகுத்தி வருகிறது. அதனால்தான் “நம் பாரத தேசம் விஞ்ஞானத்தை நம்பி இல்லை. வெங்கடாசலபதியின் அருளை நம்பி இருக்கிறது. சந்திரயான் -3 வெற்றியடைய வெங்கடாஜலபதியின் அருளே காரணம். விஞ்ஞானிகள் அல்ல” என்று கொச்சைப் படுத்தியுள்ளார் பாஜகவின் நாராயண் திருப்பதி.
இதைவிட ஒரு படி மேலே சென்றுள்ளது வட மாநில தொலைக்காட்சி ஊடகங்கள், இஸ்ரோ ஆய்வு மையத்தின் ஏவுதளத்திலிருந்து விண்ணை நோக்கி புறப்பட்ட ராக்கெட்டை அனுமன் தன் கையில் சுமந்து கொண்டு ஒரு கையால் தேசியக் கொடியை ஏந்தி கொண்டு பறப்பதாக சித்தரித்துள்ளன.
விஞ்ஞானத்தை வளர்க்கும் அறிவியல் மையங்களில் கூட அஞ்ஞானத்தின் பிடிக்குள் கொண்டுவரும் இந்துத்துவா நடைமுறைகள் ஒழிக்கப்படுவது அவசியம். அதுவே நாட்டின் அறிவியல் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.